இந்துத்துவம் என்ன செய்கிறது? பண்டைய இந்தியா பற்றிய நம்பவே இயலாத மாய புருடாக்களை திரிக்கிறது. அக்காலகட்டத்தின் அவலங்களை வசதியாகக் கடந்து செல்கிறது. அவற்றை சுட்டிக்காட்ட முயல்பவர்கள் மேல் சேறு வாரித் தூற்றுகிறது.
கற்பனைகளையும் பொய்க்கதைகளையும் சேர்த்துப் புனைந்த ஒரு சித்தாந்தம்தான் இந்துத்துவம். செக்யூலரிஸம், தேசத்தை முன்னேற்றப் பாதையில் - கல்வி, அறிவியல், பொருளாதாரம், சமூக வளர்ச்சி, சமூக நீதி என்று மாற்றுப்பாதையில் - பயணிக்க வைத்துக்கொண்டிருக்கிற வேளையில், அதனைத் திருப்பி கலாச்சாரப் பிற்போக்குத்தனம், மூடநம்பிக்கைகள், வெறுப்பு, வன்முறை என்று கொண்டு போக முயன்று கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்கு நாம் கிளர்ந்து எழ வேண்டும். தொடர்ந்து மத அடிப்படைவாதத்தைக் கேள்வி கேட்கவேண்டும். நம்முள் படிந்து கிடக்கும் மத, சாதிய வார்ப்புகளை தொடர்ந்து பரிசோதனைக்கு உள்ளாக்கி கொண்டே இருக்க வேண்டும். நவீனங்களை கேள்வி கேட்கலாம். ஆனால் ஒதுக்காமல் அவற்றின் தேவையை புரிந்து கொள்ள வேண்டும். உலகளாவிய நவீன மானுட உரிமைகள் பற்றிய புரிதலை கைக்கொள்ள முயற்சிக்கவேண்டும். பண்டைய உலகம் பற்றிய கற்பனைகளுக்கு இடம் தராமல் நவீன அறிவியலின் கொடைகளை புரிந்து கொண்டு வாழ முயல வேண்டும்.
இந்துத்துவம் ஒரு வியாதி; செக்யூலரிஸம் அதற்கான மருந்து.
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
-Sridhar Subramaniam
கோதை பதிப்பகம்