கார்த்திக் நீலகிரி
Thanks: Saravanan MK
கடிக்கும்வல் லரவும் கேட்கும்
மந்திரம் களிக்கின் றோயை
அடுக்கும்ஈ தடாதென்று ஆன்ற
ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை; உள்ளார்
எண்ணிய தெண்ணி உன்னை
முடிக்குநர் என்ற போது
முடிவின்றி முடிவ துண்டோ?
(கம்பராமாயணம்: சுந்தர காண்டம்: காட்சிப் படலம்: 5311)
பொருள்: கொடிய நாகமும் அமைச்சர் ஆணையிட்டால் அடங்குமே! நெஞ்சில் கொடுமையுள்ள உன்னை நெறிப்படுத்தவல்ல அமைச்சர்கள் இந்நாட்டில் இலரே! மயங்கித் திரிகின்றாய் நீ! செய்யத்தக்கது இது, செய்யத்தகாதது இது என்று ஆராய்ந்து உனக்கு இடித்துரைப்பவர் எவரும் இலர்; இந்த நாட்டில் அமைச்சர் என்று பெயர் படைத்தவர்கள் நீ எண்ணியபடியே எண்ணும் அடிமையுள்ளம் உடையவர்கள். அன்னாரை அமைச்சர்களாகக் கொண்ட உனக்கு அழிவு வரும் என்பதில் ஐயம் உண்டோ!
-----
இதை படித்தவுடன் எனக்கு நினைவில் வந்த திருக்குறள்,
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல்; குறள் எண்:448)
கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.