துணைக்கால் விழுங்கி PJB...
#CoronaQuarantine
PJB மீதான என் நம்பிக்கை வீண் போகல... கையால் எழுதப்பட்ட placard இல்ல... Computerல type பண்ணி printout எடுத்தது... அதுலயும் ஒரு பிழை... "எதற்க்கு?"...
#CoronaQuarantine
Clubhouse is a listening platform. Period.
#Clubhouse
#CoronaQuarantine
Celebrities in Clubhouse would be Moderators, rather than Speakers...
#Clubhouse
#CoronaQuarantine
அண்ணா அண்ணா... நா ஒரு தடவ பேசிக்கிறேன்ணா...
#Clubhouse
#CoronaQuarantine
அங்க நீங்க எல்லாரும் சேந்து பேசி ஏதாவது ஒரு நல்ல முடிவுக்கு வந்தீங்களா...
அங்கென எவனாவது உன்ன பேசவுட்டானுவளா... எலேய் இங்கென கை தூக்கவே வுடமாட்றானுவ...
#Clubhouse
#CoronaQuarantine
மன்னா, அது Twitter Spaces...
இது Facebook Live...
அந்தப்பக்கம் Clubhouse மன்னா, ஜாக்கிரதை...
#CoronaQuarantine
தட்டுப்பாடு எல்லாம் ஒண்ணும் இல்ல... 84 நாள் gapல Covishield ரெண்டாவது டோஸ் போட்டாத்தான் நல்லது'னு ஆய்வு சொல்லுது...
ஓஹ்... அப்படியா... வெரி குட்...
ஆனா, நீங்க foreign travel பண்ணனும்'னா 28 நாள் கழிச்சு கூட போட்டுக்கலாம்...
அட லூசுப்பயலே...
Covishield is 81.3% efficacious if two doses administered 12 weeks apart: Lancet study
Covishield vaccination schedule changed again, these people can get second dose after 28 days
#CoronaQuarantine
MC: Kesavan
Singer Group: என்னடா Clubhouse தொங்கிருச்சு...
*le me: அதுவா எங்க ஆச்சு... நீங்கதான்டா பாட்டு பாடி crash ஆக்கி உட்டீங்க...
#Clubhouse
#CoronaQuarantine
After every notification, me be like...
#Clubhouse
#CoronaQuarantine
இதெல்லாம் எங்க போய் முடியப்போகுது'னு தெர்ல... However, this is one of the best room I've been...
#Clubhouse
#CoronaQuarantine
I joined Clubhouse, entered a room and saw discussions going on... Thank God there was a "✌🏽Leave Quietly" button...
#CoronaQuarantine
#Clubhouse
#CoronaQuarantine
இப்பத்தான் கூட்டம் கம்மியா இருக்கும், walking போங்க'னு வீட்ல துரத்தி விட்டாங்க...
'அண்ணே... யாரையும் disturb பண்ண மாட்டேன்... உள்ள ஒரு ஓரமா ஒரு முக்கா மணி நேரம் உக்காந்திருந்துட்டு போயிரட்டுமா'னு கேட்டுப் பாப்பமா..?
#CoronaQuarantine
2020 நவம்பரில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் பக்கம் உள்ள பழைய புத்தகக் கடைகளில், ஏதோ தேடிக்கொண்டிருந்த போது கண்டெடுத்தது... முதல் பக்கத்தில் உள்ள கையெழுத்திற்காகவே Sasikala வாங்கித் தந்தது...
#தமிழ்நாடு
#TamilNadu
#HBDKalaignar98
#CoronaQuarantine
ஏழு வருடமாக நாட்டையும் பொருளாதாரத்தையும் இழுத்து தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிறார்...
#GDP
#CoronaQuarantine
ஏழு வருஷத்துல ஏழரையை கூட்டிட்டாப்ல... அதுவும் நெகடிவ்'ல...
The dream of USD 5 trillion economy busts...
//India’s Gross Domestic Product (GDP) for the January-March quarter (Q4) grew by 1.6 per cent, while the GDP for the entire financial year 2020-21 (FY21) contracted 7.3 per cent, as per the provisional estimates of GDP released by the Ministry of Statistics and Programme Implementation (MoSPI) on Monday.//
India’s GDP grows 1.6% in Q4, contracts 7.3% in FY21covid-19-surge-7338168/
#CoronaQuarantine
Ache din...
//At least half-a-dozen visa and immigration service providers told ET they have seen a 20% surge in queries in the past two months and the number is expected to go up in the coming months as people recover from Covid.//
//With the second wave impacting almost every Indian family in one way or another, the main emigration push has undergone a clear change in the recent past, said Charanjit Singh, director, iVACS Global, which offers visa and immigration services. "We are now being contacted by clients from middle-class families wishing to explore the possibilities of establishing themselves along with their families either in a country of their choice or a country which offers better facilities to its citizens, particularly health and education, requires minimum investment and takes less time to process their immigration application,” Singh said.//
//“So many people want to get out of here,” said an employee of an immigration consultant firm in Mumbai. “People feel the governments in overseas countries provide value for their money and taxes. The second wave has made people realise how important infrastructure is for a country. People feel if they are not going to be taken care of despite earning so much and if the government is unwilling to spend on healthcare, they see no reason for living here.”//
More Indians mull shifting base abroad amid pandemic pain
#CoronaQuarantine
TN... Go get vaccinated... Government is enabling free vaccination drive for 18+...
18 முதல் 44 வயது வரம்பிலான மக்களுக்கு நம் அரசு இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு இருக்கிறது... பயன்படுத்திக் கொள்ளுங்கள்... இன்றைய சூழலில் தடுப்பூசி ஒன்றே சிறந்த பாதுகாப்பு... ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள்...
PS: புகைப்படத்தில் இருப்பது வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளி (100 அடி ரோடு), சென்னை...
#CoronaQuarantine
எப்படியும், அகண்ட பாரதத்துல, நாங்க இருக்கற நாட்டையும் சீக்கிரமே இணைச்சுடப் போறீங்க... அதான் எதுக்கு வீணா திரும்பி ஊருக்கு வந்துகிட்டு'னு அப்படியே இங்கேயே இருந்துட்டோம்... ஏழு வருஷம் என்ன, எழுபது வருஷம் ஆனாலும் நாங்க காத்திருக்கோம் ஜீ... ஜெய் ஹிந்த்...
#CoronaQuarantine
இதையே, கொஞ்சம் உப்பு+காரம் போட்டு, பொன்னிறமா...
சரி, தின்னுங்க...
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
Never fear harassment... தைரியமா எதுத்து நின்னு ரெண்டு அடி போட்டா ஓடிருவானுங்க... It's a mind game...
#CoronaQuarantine
எத்தனையோ படம் பாத்துருக்கோம்... Disney Hotstar freeயா கெடச்சது'னு உக்காந்த பாவத்துக்கு... அடேய்... இவனுக்கு சரியான ஆள் இல்லை...
#Lockdown_பரிதாபங்கள்
#CoronaQuarantine
அதென்ன PSBB..? ஒழுங்கா தெளிவா Padma Seshadri Bala Bhavan ஸ்கூல்'னு சொல்ல மாட்டீங்களா..? Confuse ஆகுதுல்ல...
VC: Priya Bhavani Shankar
#CoronaQuarantine
Markandey Katju
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு அவர்கள், இந்தியன் பிரஸ் கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்ற பின் CNN-IBN ஆங்கில தொலைக்காட்சியில், 01-Nov-2011 அன்று கரண் தாப்பருக்கு அளித்த நேர்காணல்.
கரண் தாப்பர்: இந்தியா கடந்து கொண்டிருக்கும் இந்த மாற்றத்திற்கான காலத்தில் என்ன மாதிரியான பங்கை இந்திய ஊடகங்கள் செய்கின்றன?
மார்கண்டேய கட்ஜு: இந்திய ஊடகங்கள், பெரும்பாலும், மக்களுக்கு எதிரான பங்கை ஆற்றுகின்றன. இதை மூன்று விதத்தில் விவரிக்கிறேன்.
முதலாவதாக, அடிப்படையில் பொருளாதார சிக்கலாக இருக்கக் கூடிய உண்மையான சிக்கல்களில் இருந்து மக்களின் கவனத்தை அது திசை திருப்புகிறது. 80 விழுக்காடு மக்கள் கொடுமையான வறுமை, வேலையின்மை சூழலில், விலைவாசி உயர்வை எதிர்கொண்டு, மருத்துவ வசதிகள் இன்றி வாழ்கின்றனர். இந்த சிக்கல்களில் இருந்து கவனத்தை திசை திருப்பி, மாறாக, திரை நட்சத்திரங்களையும், ஆடை அலங்கார நிகழ்வுகளையும், கிரிக்கெட்டையும் முதன்மைப்படுத்தி, ஏதோ அவர்தான் மக்களின் உண்மையான சிக்கல்கள் போல காட்டுகின்றன.
இரண்டாவதாக, ஊடகங்கள் அடிக்கடி மக்களைப் பிளவுபடுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, மும்பை, தில்லி, பெங்களூர் என்று எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும், சில மணி நேரங்களுக்குள், ஏறத்தாழ எல்லா தொலைக்காட்சிகளுமே, 'இந்திய முஜாகிதீன்' அல்லது 'ஜய்ஷ் இ முகமத்' அல்லது 'ஹர்கத் உல் ஜிஹாத்' அல்லது ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை கொண்ட அமைப்பு இதற்கு பொறுப்பேற்று இருப்பதாக ஒரு மின்னஞ்சல் வந்திருப்பதாகவோ, குறுஞ்செய்தி வந்திருப்பதாகவோ காட்டத் தொடங்குகின்றன. ஒரு மின்னஞ்சலையோ, குறுஞ்செய்தியையோ எந்த ஒரு தவறான மனிதரும் அனுப்பலாம். ஆனால், அதை தொலைக்காட்சியில் காட்டுவதாலும், மறுநாள் அச்சில் வெளிவருவதாலும், எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் மற்றும் குண்டு வீசுபவர்கள் என்ற செய்தியை பரப்புகின்றன. முஸ்லிம்களை கொடூரமானவர்களாக சித்தரிக்கின்றன.
மூன்றாவதாக, நான் முன்பே கூறியது போல, இந்தியா நிலவுடைமைச் சமூகத்திலிருந்து நவீன சமூகத்திற்கு மாறுவதற்கான காலகட்டத்தில் உள்ளது. ஐரோப்பாவில் இத்தனை காலகட்டத்தில் ஐரோப்பிய ஊடகங்கள் செய்ததைப் போல, நாட்டை முன் நடத்த உதவக்கூடிய அறிவியல்பூர்வமான சிந்தனைகளை இந்திய ஊடகங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால், இங்கு ஊடகங்கள் மூடநம்பிக்கைகளையும், ஜோதிடத்தையும், அது போன்றவற்றையும் ஊக்கப்படுத்துகின்றன. நாட்டில் 80 முதல் 90 விழுக்காடு மக்கள் ஜாதி, மதம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றில் ஆழமாக வேரூன்றியவர்களாக, மனதளவில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அறிவுத் தெளிவு பெற்ற இந்தியாவின் உறுப்பினர்களாக அவர்களை ஆக்கும் விதத்தில் அவர்களை உயர்த்தி, ஒரு மேம்பட்ட உலகில் நிலைக்கு அவர்களை கொண்டுவர ஊடகங்கள் பணி புரிய வேண்டுமா அல்லது அவர்களின் நிலைக்கு தன்னை தாழ்த்தி, அவர்கள் பின்தங்கிய நிலையை மாறாமல் காக்கும் வேலையை செய்ய வேண்டுமா?
சுத்த ஏமாற்று வேலையான ஜோதிடத்தை நிறைய தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. ஜோதிடம் ஒரு முழு மூடநம்பிக்கை. 'இன்று இந்த நிறத்தில் சட்டை அணிந்தால் உங்களுக்கு மிகவும் நல்லது' என்பதெல்லாம் என்னது?
ஊடகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் மீது எனக்கு மோசமான கருத்தே உள்ளது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், பொருளாதார கருத்தியல்கள் குறித்தோ, அரசியல், அறிவியல், இலக்கியம், தத்துவம் என எவை குறித்தும் அவர்களுக்கு போதுமான அறிவு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் இதையெல்லாம் படித்து இருப்பார்கள் என்றே நான் நினைக்கவில்லை.
Reference: 'I have a poor opinion of most media people'
தமிழில்: பூங்குழலி
"ஊடக சுதந்திரமா? ஊடகத்திலிருந்து சுதந்திரமா?"
முரண் பதிப்பகம்
பிகு: இந்த நூலை எனக்கு அனுப்பிய Amina Mohammed க்கு நன்றி...
#CoronaQuarantine
They feared Tamil presence... Now deal with Chinese...
//Sri Lanka is on a highway to becoming a Chinese colony. It began with the Hambantota Port and has now spilled into the port city of Colombo. Both are strategic assets, one of which is already under Chinese control. The other could soon follow if the government has its way. The Colombo port city is a special financial zone being built next to Colombo, mostly on land reclaimed from the sea. They are calling it the next Dubai and it is being touted as a city from the future. Powered by renewable energy, the city will have a financial centre, an international island, and a sprawling park right in the middle. But there’s just one problem - Port city Colombo is a Chinese project and part of President Xi Jinping's Belt and Road Initiative. Beijing is not looking for a partnership in Sri Lanka. Instead, it wants an overseas province. This is how Sri Lanka lost the Hambantota port after signing massive deals with the Chinese. When it was time to pay up, they had no money.//
With Colombo port city, China sees a potential overseas colony in Sri Lanka
#CoronaQuarantine
நானும் சசியும் சென்ற சனிக்கிழமை காலை Covishield vaccine first dose போட்டுக்கொண்டோம்... இதோ, ஐந்து நாளாகிவிட்டது... நலமாக இருக்கிறோம்...
எனக்கு ஊசி போட்டுக்கொண்ட சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு இரவு வரை மட்டும் சற்று அசதி, உடல் வலி, லேசான ஜூரம் மற்றும் தலைவலி இருந்தது... திங்கள் காலை வேலைக்கு அமர்ந்து விட்டேன்... சசிக்கு இது போன்ற எந்தப் பிரச்சினையும் பேருக்கு கூட ஏற்படவில்லை... We are perfect...
அப்பாவும் (67 வயது) அம்மாவும் (60 வயது) Covishield இரண்டு டோஸுமே போட்டுக்கொண்டு விட்டார்கள்... அவர்களுக்கு ஊசியால் எந்த பாதிப்பும் இல்லை... ஜாலியாக இருக்கிறார்கள்...
WhatsApp வதந்திகளை நம்பாமல், exceptional incidentsகளை கண்டு பயப்படாமல், தைரியமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்... Covishield, Covaxin, Sputnik எதுவாக இருப்பினும்...
தடுப்பூசி மட்டுமே இப்போதைக்கு நமக்கான சிறந்த பாதுகாப்பு...
#CoronaQuarantine
When you're in Legend League and finished all your eight attacks for the day...
#COC #ClashOfClans
#CoronaQuarantine
இதுக்குத்தான், நன்கொடை விவரம் எல்லாம் வெளிய தெரியாம பாத்துக்குறாரு தல...
#CoronaQuarantine
"மிகப்பெரிய தோல்வி மத்திய அரசின் தரப்பில் இருக்கிறது. இந்த தேசத்தை கூட்டுப் பொறுப்பால் அதிகாரப்பரவலால் தான் ஆட்சி செய்ய முடியும். மையப்படுத்தப்பட்ட அதிகாரம் நெருக்கடிகளில் செயலிழக்கும். இப்போது நம்பிக்கையூட்டும் அம்சம் மாநில அரசு மிகத் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓரிரு நாட்களில் முழுமையாகவே ஒருங்கிணைந்த நிர்வாகத்திற்குள் அனைத்தும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த அரசின் கடும் விமர்சகர்கள் என நான் நினைப்பவர்கள் கூட மிகத் திறமையான செயல்பாடுகள் என்றே சொல்கிறார்கள். மிக விரைவிலேயே நிலைமை கட்டுக்குள் வரக்கூடும். இது தொடர்ந்தால் ஓரிரு மாதங்களிலேயே மீளவும் முடியலாம். இதற்காகவே ஸ்டாலின் தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர்களில் ஒருவராக நினைக்கப்படுவார்."
-எழுத்தாளர் திரு ஜெயமோகன்
#CoronaQuarantine
Courtesy: Gaurav Khattar
𝐅𝐚𝐬𝐭𝐞𝐬𝐭 𝐅𝐢𝐧𝐠𝐞𝐫 𝐅𝐢𝐫𝐬𝐭
Booking a slot for the vaccine is more difficult than fighting Corona. From 'booked' vaccine centers to the incorrect captchas, to the endless wait for OTPs, to the erratic schedule of notifications on the Cowin website, booking a slot for vaccines is more difficult than fighting the virus itself.
As if Covid, social distancing, masks, double masks, getting oxygen, ambulance, hospital beds, medicines, crematorium space, job losses, and a fractured Indian economy weren't enough trouble already, this new fight for getting jabs is unbearable.
It appears that our duty as middle-class citizens is simply to pay taxes and die as an unknown. For years, we have all paid our taxes as responsible citizens. For the first time, we needed the state to step in, and it has failed us miserably.
Finally, it boils down to how lucky you are to see a GREEN slot and then how quickly you can type - 𝓕𝓪𝓼𝓽𝓮𝓼𝓽 𝓕𝓲𝓷𝓰𝓮𝓻 𝓕𝓲𝓻𝓼𝓽!
#CoronaQuarantine
மக்கள் நீதி மைய்யம்...
#CoronaQuarantine
Courtesy: Bapeen Leo Joseph
Sonu Sood என்னும் மாய பிம்பம்
Sonu Sood பஞ்சாப் மாநிலம் மோகா என்னும் இடத்தில் 1973ல் பிறந்தார். தந்தை சக்தி சாகர் சூட் ஒரு துணி வியாபாரி. தாயார் ஆசிரியை. மிக சாதாரண குடும்பத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்தார். பஞ்சாபில் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்பை நாக்பூர் Yeshwantrao Chavan College of Engineeringல் முடித்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே மாடலிங் செய்து வந்தார். 1996ல் கல்லூரி காலத்தில் காதலித்த சொனாலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 1999ல் கள்ளழகர் படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அதன்பின் தெலுங்கு தமிழ் ஹிந்தி என நடித்து பெயர் பெற்றார்.
சிறிது சிறிதாக வளர்ந்து வந்த அவர் வாழ்க்கையை திருப்புமுனையாக்கும் நாள் 2009ல் அமைந்தது. தான் நாக்பூரில் படித்த Yeshwantrao Chavan College of Engineering இன் Alumni meetக்கு அந்த வருடம் சோனு சூடை அழைத்திருந்தனர். வழக்கமாக மந்தமாக செல்லும் Alumni விழா சினிமா பிரபலத்தின் வருகையால் களை கட்டியது. அந்த கல்லூரியின் நிறுவனர் திரு. Datta Meghe காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக அப்போது இருந்தார். Medical colleges, Engineering, Arts and science, pharmacy college என பல கல்லூரிகளை உள்ளடக்கிய Meghe group of Educational Institutions என்று மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்ஜியத்தை நாக்பூரில் நடத்தி வந்தனர். அவரின் இளைய மகன் Sameer Meghe தந்தையுடன் அரசியல் மற்றும் கல்லூரிகளை நிர்வகித்து வந்தார். பெரிய மகன் Sagar Meghe சிங்கப்பூரில் உள்ளார். சமீரும் சோனுவும் நெருங்கிய நண்பர்களாகினர்.
2010ல் சல்மான் கானுடன் நடித்த Dabaang திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது... பல ஹிந்தி பட வாய்ப்புகள் சோனுவுக்கு அமைந்தன. தான் சம்பாதித்த பணத்தில் கணக்கில் காட்டாமல் 30 கோடி ரூபாயில் மும்பையில் சொத்து வாங்கியதாக வந்த தகவலை அடுத்து டிசம்பர் 2012 ஆம் ஆண்டு சோனு வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. சமீர், தத்தா மேகே தலையீட்டில் நடவடிக்கை இன்றி கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 2013ல் sheetal talwar என்ற தயாரிப்பாளர் சோனு தன்னிடம் சொத்து விஷயமாக 33 லட்ச ரூபாயை ஏமாற்றி விட்டதாக கூறி காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிந்தார். அதுவும் மேகே குடும்ப தலையீட்டில் முடித்து வைக்கப்பட்டது. சமீருக்கு தனது கல்லூரியை புகழ் பெற வைக்கும் தனது ஆசையை சோனுவிடம் கூறினார். சோனு அப்போது நடித்து கொண்டிருந்த 'Shootout at Wadala' திரைப்பட தயாரிப்பாளரிடம் இது குறித்து பேசினார். படத்தின் ப்ரமோஷன் பொதுவாக 5 நட்சத்திர ஹோட்டலில் நடக்கும். அதை மாற்றி, அந்த படத்தின் ப்ரமோஷனை தனது YCCE கல்லூரியின் ஆடிடோரியத்தில் நடக்க வைத்தார். சோனு சூட், ஜான் ஆப்ரஹாம், அனில் கபூர் என நட்சத்திர பட்டாளம் கல்லூரியில் திரண்டது. மீடியா கவரேஜுடன் திருவிழா போல கூட்டம் களைகட்டியது.
2014 நாடாளுமன்ற தேர்தலில் தத்தா மேகே தனது மகன் சமீர் மேகேக்கு காங்கிரஸ் சார்பாக வர்தா தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு பெற்றார். அப்போது நாடெங்கும் காங்கிரஸ் எதிர்ப்பு மற்றும் மோடி அலையின் காரணமாக சமீர் மோசமான தோல்வியை பெற்றார். தத்தா மேகேக்கு அரசியல் தாண்டி நித்தின் கட்கரியுடன் நீண்ட கால நெருங்கிய நட்பு இருந்து வந்தது. தோல்வியின் விரக்தியில் இருந்த அவரை கட்கரி சந்தித்து பாஜகவில் சேருமாறு அழைப்பு விடுத்தார். ஜூலை 5,2014 அன்று தத்தா மேகே தனது இரு மகன்களுடன் சென்று நித்தின் கட்கரி, தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
2016ல் சோனு தனது தந்தையின் பெயரில் சக்தி சாகர் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி தனது மனைவியை தயாரிப்பளராக்கினார். தேவி என்று பிரபுதேவா நடித்து இயக்கிய தமிழ் படத்தின் ஹிந்தி உரிமையை வாங்கி 'Tutak Tutak Tutiya' என்று சொந்தமாக தயாரித்து வெளியிட்டார். படம் படுதோல்வி அடைந்து முதலுக்கே மோசமானது.. பண கஷ்டத்தில் சிக்கினார். சில சொத்துக்களை விற்று அதை சரிகட்டினார்.
2019இல் hingna தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட சமீருக்கு இடம் கிடைத்தது. சமீர் தனது நட்சத்திர பேச்சாளராக சோனு சூடை களமிறக்கினார். அனல்பறக்க நடந்த பிரச்சாரத்துக்கு பின் சமீர் மாபெரும் வெற்றி பெற்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். சோனுவுக்கு அந்த தேர்தலுக்கு முன் மேகே குடும்பத்தின் மூலம் பாஜகவின் மேல்மட்ட தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. நீண்ட நாட்களாக பஞ்சாபில் கால் பதிக்க தகுந்த துருப்பு சீட்டை தேடிகொண்டு இருந்த பாஜகவினருக்கு ஒரு மணி அடித்தது..
பஞ்சாபியர்கள் மதம் மற்றும் தொழில் இரண்டையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பவர்கள். வெறும் மதத்தை வைத்து அங்கு ஓட்டு வாங்கி விட முடியாது. படித்தவர்கள் அதிகம். பெரும் நிறுவனத்தில் வேலை, விவசாயம், தொழிலதிபர்கள் என்று பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் அதிகம் உள்ள ஊர். ஆகவே பஞ்சாப் மண்ணின் மைந்தனான சோனுவை சமூக வலைத்தளத்தில் மோடிக்கு 2013-14ல் குடுக்கப்பட்ட பிம்பங்களின் வகையையே பின்பற்ற டெல்லியில் ஆலோசனை செய்து நாக்பூரில் முடிவு செய்தனர்.
ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் உதவி செய்ய சோனுவுக்கு பணத்தை வாரி இறைத்தனர். சமூக வலைத்தளம் மூலம் கிடைக்கும் புகழை தொலைக்காட்சி, பத்திரிகை வாயிலாக மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல வழி அமைக்கப்படுகிறது. அதன்படியே எல்லாம் நடக்க சோனு புகழின் உச்சிக்கு செல்கிறார்.
ஆனால் அவர்கள் நினைத்து பார்க்காத ஒன்று எதிர்பாரா விதமாக நடக்கிறது. விவசாய சட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டம் வெடிக்கிறது. பஞ்சாப் விவசாயிகள் பெருமளவில் போராட்டத்தை நடத்துகின்றனர். சோனுவிடம் இது குறித்து பேட்டி காண்கையில், விவசாயிகள் தான் எல்லாமே அவர்கள் இல்லாமல் ஒன்றும் இல்லை என்று முடித்து கொள்கிறார். அடுத்தது கொரொனா வருகிறது. இதை வைத்து இன்னும் பெயர் வாங்க பணம் இறைக்கப்படுகிறது.
முதல் முறை மத்திய அரசு முழு நாட்டுக்கும் லாக் டவுன் போடுகிறது. வெளி நாட்டில் சிக்கிகொண்டு இருக்கும் தன் மாநில மக்கள மீட்டு கொண்டு வர அனுமதி மட்டும் தாருங்கள், மொத்த செலவயும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று அசாம், ஜார்ஜ்கண்ட், கேரளா, தமிழ் நாடு போன்ற பல மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்... இது எதுக்கும் உள்துறை அமைச்சகம், சிவில் ஏவியேஷன் அமைச்சகம் ஒத்துக்கொண்டு அனுமதி வழங்கவில்லை... இந்த விஷயத்தில் கேரளா கோர்ட் வரைக்கும் சென்றது... ஆனால் எந்த பின்புலமும் இல்லை என்று சொல்லப்படும் ஒரு தனி மனிதன் சோனு சூடுக்கு 7 விமானங்கள் பறக்க மத்திய அரசு அனுமதி குடுக்கிறது, எந்த கேள்வியும் இல்லாமல்... பல நாடுகளில் இருந்து மக்களை கூட்டிக்கொண்டு வருவதை பத்திரிகைகள் விளம்பர படுத்துகின்றது....!!! இது போக வெளி மாநிலங்களில் சிக்கிய உள்ளூர் மக்களை சொந்த ஊருக்கு அனுப்ப பல மாநிலங்கள் மத்திய அரசிடம் சிறப்பு ரயிலுக்கு அனுமதி கேட்டவண்ணம் இருந்தனர். ஆனால் உள்துறை அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் சோனுவிற்கு தனி ரயில்கள் ஒதுக்கி அனுமதி வழங்கினர்.. பஸ்களில் அனுப்ப சிறப்பு அனுமதியும் வழங்கினர். எந்த தடையும் இல்லை...
இதுவரை அவர் செய்த உதவிகளுக்கு தோராயமாக கணக்கிட்டால் நூறு கோடிகள் தாண்டும். ஆனால் ஆவருக்கு அவ்வளவு சொத்துக்கள் இல்லை.. ஒரு வேளை இருந்தாலும் குறுகிய காலத்தில் பணமாக்கியது எப்படி என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை.
வழக்கம் போல ஊடகங்கள் செய்தியை பரப்பி சோனுவுக்கு பெரும் புகழ் தேடி குடுத்த வண்ணம் இருந்தனர். செப்டம்பர்2020ல் சோனுவுக்கு Best Humanitarian award குடுக்கப்படுகிறது.
ஏப்ரல் 30 பஞ்சாப் தேர்தல் ஆணையராக திரு. Karuna Raju IAS (Batch 1998) நியமிக்கபடுகிறார்.
நவம்பர் 2020ல் பஞ்சாப் தேர்தல் ஆணையம் சோனு சூடை பஞ்சாபுக்கான சிறப்பு தூதுவராக நியமிப்பதாக அறிவிக்கிறார் பஞ்சாப் தேர்தல் ஆணையர். திரு கருணா ராஜூவின் மனைவி திருமதி. Anindita IAS ( Batch 2007) திருமணத்திற்கு பின் IAS ஆனவர். Anindita வின் குடும்பம் முழுவதும் நாக்பூரில் மருத்துவர்கள். அவரது தந்தை மறைந்த Dr.Indrajit Mitra, தாய் Dr. Shikha Mitra Nagpur medical gold medalist, தாய் மாமா Dr. Dasgupta ,Nagpur Lata mangheswar hospital Dean(Rtd), Dr.Kajal Mitra(current Dean), Dr.Sajal Mitra,Nagpur medical college &Hospital Dean(VRS) இவர்கள் அனைவரும் தத்தா மேகேவின் குடும்பத்தினருக்கு மிக நெருக்கம். பல மருத்துவமனைகள் நடத்துவதால் மஹாராஷ்டிரா மருத்துவ கவுன்சில், இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் நாக்பூர் கிளையில் மேகேவின் செல்வாக்கு அதிகம். அதன் மூலம் தான் பஞ்சாப் தேர்தல் அதிகாரி சோனுவை தூதுவராக நியமிக்கிறார்.
இதை அறிந்த சிவசேனா சோனுவின் மீது கண் வைக்கிறது.அனுமதி இல்லாமல் தனது ஆறு மாடி குடியிருப்பை ஹோட்டலாக மாற்றம் செய்துள்ளார். விஷயம் கேள்வி பட்ட மஹாராஷ்டிர அரசு அந்த பில்டிங்கிற்கு சீல் வைக்கிறது. மும்பை நீதிமன்றத்தில் மஹாராஷ்டிர அரசு சோனுவை 'Habitual offender' என்று affidavit ல் தாக்கல் செய்கிறது. தீர்ப்பு சோனுவுக்கு எதிராக வருகிறது. மீண்டும் மேகேவிடம் வருகிறார். பாஜக மேலிடத்தில் பேசி சோனு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார். கொரொனா காலத்திலும் வழக்கை உடனடியாக எடுத்து மும்பை தீர்ப்பை நிறுத்தி வைத்து சோனுவுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கிறார் நீதிபதி. மஹாராஷ்டிர பாஜக இதை கொண்டாடி சிவசேனா அரசுக்கு கோர்ட்டு குடுத்த சாட்டையடி என்று பேட்டி குடுக்கிறது.
விவசாய போராட்டத்தால் பாஜகவிற்கு எதிரான அலை வீசுகிறது.
இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பஞ்சாப் தேர்தலில் சோனுவை முன்னிறுத்துவது வீணாகிவிடும் என்று மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளதாகவும், சோனுவை பஞ்சாப் மட்டுமில்லாமல் அரியானா, டெல்லி என்று மூன்று மாநிலத்திலும் முன்னிறுத்த என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்று ஆலோசித்து வருவதாகவும் டெல்லி பறவை தகவல் தந்துள்ளது...
எதுவாகினும், அதுவரை ஏதோ ஒரு வழியில் மக்களுக்கு நன்மை கிடைக்கட்டும்... ஆனால் சில்லறை மட்டும் சிதற விட வேண்டாம்...!!!
PS: போன வருஷமே சோனு பாஜகவுக்கு பிரச்சாரம் பண்ணின போட்டோ நெட்ல வைரல் ஆச்சு... உஷாரா அத கூகுள்ல இருந்து இப்போ அழிச்சுடாங்க... எங்க தேடுனாலும் கிடைக்கல.... ஆனா லோக்கல் மராத்தி சேனல்ல சோனு 2019ல பாஜக சமீர் மேகேவுக்கு பிரச்சாரம் பண்ணின வீடியோவ அழிக்காம விட்டானுங்க...!!! வீடியோ வைரல் ஆச்சுனா அழிச்சிடுவாங்க...!!!
#CoronaQuarantine
Covid Vaccination Centre information
1. Store the number +91 90131 51515
2. Open WhatsApp and send 'Hi' to this number for covid related details.
3. Open WhatsApp and send Indian PIN code (Eg: 600044, 410206, 625014, etc.) to know vaccination slot availability.
4. For more info https://www.cowin.gov.in/home
#Verified
#CoronaQuarantine
தர்ம யுத்தம் வென்றது... எதிர்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்...
#CoronaQuarantine
டீக்கடைக்காரர் now be like...
#CoronaQuarantine
I believe Stalin...
#CoronaQuarantine
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...
#CoronaQuarantine
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...
#LabourDay
#CoronaQuarantine
ஏன்டா, இன்னுமாடா உங்கண்ணன் முதல்வர்'னு நம்பிட்டுருக்க...
NRI தபால் ஓட்டு எல்லாம் எண்ணி முடியட்டுங்க... அப்புறம் பேசலாம்...
#TNElections2021
#CoronaQuarantine
எதையும் ப்ளான் பண்ணித்தான் பண்ணனும்...
#CoronaQuarantine
ம்ம்... போ... சிங்கப்பூர்ல ரிசல்ட் வந்துருச்சு, எங்க மாமா phone பண்ணி சொல்லிட்டாருனு போய் போஸ்ட் போடு... போ....
#TNElections2021
#CoronaQuarantine
Because he stood without fear and questioned for us...
#IStandWithSiddharth
When we memers interact...
#CoronaQuarantine
கல்லூரி ஹாஸ்டல் சேர்ந்த புதிதில் இது நடக்கும்...
மெஸ்ஸில் அருகில் அமர்ந்திருக்கும் சீனியர் மெதுவாக நம்மிடம் கேட்பார், "யோவ் ஜூன்ஸு, அந்த tube light எவ்ளோ நீளம் இருக்கும்..?"
நான் தயங்கித் கொண்டே, "ஒரு நாலு அடி இருக்கும் சீனியர்.."
"அதுல பாதிய உன் பின்னாடி சொருகிக்க..." என்று சொல்லிவிட்டு பகபகவென சிரிப்பார்...
கண்களில் முட்டிக்கொண்டு வரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு அடுத்த கவளம் சாப்பிடுவேன்...
Dining tableல் அமர்ந்திருக்கும் எல்லோரும் சிரித்து முடித்து அமைதியான பின்பு, அக்கறையுடன் சீனியர் கேட்பார், "என்னய்யா கோவிச்சுக்கிட்டியா..?"
கண்ணீர் மறைத்து, "இல்லை சீனியர்..." என்பேன்...
"அப்ப மீதியையும் சொருகிக்க..." என்று சொல்லி விட்டு, மீண்டும் எல்லோரும் சிரிக்க ஆரம்பிப்பார்கள்...
கருணையற்ற கார்ப்பரேட் அரசு... சுரணையற்ற மக்கள்...
#CoronaQuarantine
When you end up fighting in kitchen with the அஞ்சறைப் பெட்டி open...
#இல்லறமதிகாரம்
#CoronaQuarantine
Theaters be like, "Lockdown'னா நேரா நம்மகிட்டயே வர்றானுங்க..."
#CoronaQuarantine
குட்நைட் கார்த்திக்...
ஹாய் ஸ்ருதி... பத்து நாளா மெஸேஜ்'ம் இல்ல, ரிப்ளை'யும் இல்ல... இது என்ன புது நம்பர்...
இது jio... பழைய நம்பர வீட்டுக்காரர்ட குடுத்துட்டேன்...
#APU
#CoronaQuarantine
Mr Mayur Shelke
Pointsman of Vangani Station, Central Lines of the Mumbai Suburban Railway Network, Mumbai Division...
Without a second thought, he ran towards and timely saved the kid... His brave action is reported to the General Manager for honorary award...
God bless such souls...
#CoronaQuarantine
போய் சொல்லு போ...
#CoronaQuarantine