கார்த்திக் நீலகிரி

உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 20, 2024

லட்டு சாப்பிட்ட தோஷம் போக, இவனுங்க பரிகாரமும் நம்மையே பண்ணச் சொல்வானுங்களே...

FB_IMG_1726846785522.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 19, 2024

குழப்பமான ஆளுக நாங்க... எல்லா கறியும் சாப்பிடுவோம்... ஆனா சில நாட்கள் மரக்கறி மட்டும் சாப்பிடுவோம்...

அப்படிப்பட்ட ஒரு நாளில் சூர்யா பள்ளியில் அவன் நண்பன் கொண்டு வந்த முட்டையை பகிர்ந்து சாப்பிட்டு வந்திருந்தான்... வீட்டுக்கு வந்து சொன்ன போது தலைவி சத்தம் போட்டாள்... அதைப் போன்ற மற்றொரு நாளில் மீண்டும் பள்ளியில் பகிர்ந்து உண்டு வந்திருந்தான்... இந்த முறை சிக்கன்... வீட்டுக்கு வந்து சொன்ன போது தலைவிக்கு முன் தாத்தா முந்திக்கொண்டார்... "ஏன்டா... அம்மா இன்னைக்கு சாப்பிடக்கூடாது'னு சொன்னாங்கல்ல... எல்லாத்தையும் வீட்ல சொல்லிட்டு இருப்பியா... சும்மா இருக்க மாட்டியா... போடா..." என்று சத்தம் போட்டவர், பின் தனியாக சிக்கிய சூர்யாவிடம், "அம்மாவுக்கு பிடிக்கலீல்ல... ஏன்டா சொல்ற... ஜாலியா friendsஓட சாப்டியா, பேசாம இரு... அம்மா வருத்தப்படுற மாதிரி எதுவும் சொல்லாத..." என்று சொல்லியிருக்கிறார்...

இவ்வளவுதான் எங்க புரட்டாசி மரக்கறி மரபு...

Statuary Disclaimer: As a simple Sourashtra Bavvu, புரட்டாசி எல்லாம் நாங்க sincerely follow பண்ணுவோம்...

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 19, 2024

அதெல்லாம் ஒண்ணும் இல்லேய்... சும்மா புரளிய கிளப்பாதீங்கோ...

FB_IMG_1726761300471.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 19, 2024

டேய்ய்ய்... சாம்பு மவனே... எங்கள எல்லாம் புரட்டாசி விரதம் இருக்கச் சொல்லிட்டு...

FB_IMG_1726762562739.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 19, 2024

இப்படித்தான்... 1857ல, மாட்டுக் கொழுப்பு இருக்கு, பன்னிக் கொழுப்பு இருக்கு'னு கிளப்பி விட்டு பெரிய பஞ்சாயத்து ஆகிப்போச்சு...

IMG_20240919_234929.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 18, 2024

இப்ப இருக்கிற சூழ்நிலையில் இதெல்லாம் எடுத்து எழுத கூட கொஞ்சம் பயம்மா இருக்கு... ஆனா, தலைவர் 70, 80 வருடம் முன்னாடியே, இன்னும் கடினமாக இருந்த சமுதாய சூழ்நிலையிலேயே, இதெல்லாம் பேசிட்டு போயிட்டார்... அதனால் தான் அவர் GOAT...

#Periyar146

#SocialJusticeDay

தந்தை பெரியார் தொகுப்பில் இருந்து சில பகுதிகள்...

*****

"மனித வாழ்வின் பெருமை எது?"

ஆசிரியர் : தந்தை பெரியார் 

*****

நான் பேசுகிறவைகள் இதுவரை இருந்து வந்த பழக்க வழக்கங்களுக்கு மாறான முறைகளில் இருக்கும். இப்படிக் கூறுவது நான் வேறுயாரையும் ஆதாரங்காட்டியோ, முனிவர்கள் - பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் காட்டியோ, அல்லது பழைய புராணங்கள் கூறுகின்றன என்பதைக் காட்டியோ இல்லை. என்னுடைய மனதிற்குத் தென்பட்டவைகளைக் கூறுகிறேன். “நீ உன்னுடைய மூளைக்குச் சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்; இல்லையேல் சும்மா இரு,” என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். அன்றி “நீ நம்பத்தான் வேண்டும். நான் கூறுவதுதான் முடிந்த முடிவு. ஆகவே நம்பு! நம்பினால் மோட்சம்! நம்பாவிடில் நரகம்” என்று கூறுவதில்லை.

*****

இதுவரை கூறிய அதிசய அற்புதங்களில் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்த அறிவாளி நம் நாட்டு மனிதனாக இருக்கவில்லை. எல்லாம் மேனாடுகளில் தான் பகுத்தறிவாளி தோன்றுகிறான். அயல் நாட்டில்தான் விஞ்ஞானி தோன்றுகிறான்; பெரிய ஆராய்ச்சியாளர்கள் புதிய சாதனங்களைக் காணும் அறிவு பெற்ற நிபுணர்கள் தோன்றுகிறார்கள்.

ஆனால் இந்நாட்டில் இதுவரை தோன்றியவர்கள் எல்லாரும் பக்தர்கள், பரமாத்மாக்கள், கடவுள் அவதாரங்கள், ரிஷிகள், முனிவர்கள்; இப்படிப்பட்ட அயோக்கியர்கள் தான் தோன்றியதாகப் பார்ப்பனப் புராணங்கள் கூறுகின்றன. அதுவும் இன்றி இப்போது நம் கண் முன்பாகவே தோன்றிய மகாத்மா இராமராஜ்யத்தை உண்டாக்கத் தோன்றினார். இன்னும் இப்போதுள்ள மந்திரிகள் அரசியல் தலைவர்கூட காந்தி ஏற்படுத்திய இராமராஜ்யத்திற்குதான் தலைவர்களே அன்றி ஜனநாயக நாட்டிற்குத் தலைவர்கள் அல்லர். இராமராஜ்ஜியத்தில் எந்த முறையில் ஆட்சி செய்யப்பட்டதோ அதே முறையைத்தான் இன்றைய ஆட்சியிலும் கையாளுகின்றனர். இப்படி நம் நாட்டில் ஒன்றுக்கும் உபயோகமற்ற அயோக்கியர்கள்தான் இதுவரைக்கும் தோன்றி நம் நாட்டைப் பாழாக்கிவிட்டனர்.

*****

கடவுளையே உருட்டித்தள்ளி உடைத்து விட்டுப் போய்விடுகிறான்! கடவுளுடைய பெண்டாட்டியை அம்மணமாக விட்டுச் சேலையை அவிழ்த்துக் கொண்டு போய்விடுகிறான். சாமியின் அங்கங்களையே உடைத்துவிட்டுப் போய்விடுகிறான். கடவுளையே உடைத்துச் சுக்கு  தூளாக்குகின்றனர். இதுவரை எந்தச் சாமியும் ஒருவனைக் கூட வாய் திறந்து கேட்டதே இல்லை.

*****

நம்முடைய நாட்டு எல்லைக்குள் ஒரு குட்டிக் கடவுள்கூட இருக்கக்கூடாது. கடவுளைக் கூறிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனக் குஞ்சு கூட இருக்கவும் கூடாது. இவை எல்லாம் நம் மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்து கொண்டு எதையும் சிந்திக்கும் அறிவில்லாது இருந்த காலத்தில் தேவைப்பட்டனர். இப்போது இவை தேவையற்றவையாகும். ஆனால் இந்த 1956 ஆம் ஆண்டிலும் அவைகள் இருந்து கொண்டிருக்கின்றன என்றால் அது நம்முடைய முட்டாள் தனத்தைக் குறிக்கிறது என்றே கூறவேண்டும்.

மற்றும் மனிதன் செய்கிற பாவ புண்ணியம் என்பதைப் பற்றிச் சிந்தித்தால் அதனுடைய யோக்கியதையும் வெளிப்படும். புண்ணியம் செய்தவன்தான் மோட்சமடைய முடியும். பாவம் செய்தவன் மோட்ச மடைய முடியாது. ஆனால் பார்ப்பனனுக்குத் தானதர்மம் செய்வதால் அதுவே பெரிய புண்ணியம் என்று நம்பும்படி செய்துவிட்டனர்.

இப்படி இந்து மதத்தில் மட்டும் இல்லை. கிறிஸ்தவ மதத்திலும் இருக்கிறது. பாதிரிகள் கூறுகிறபடி கேட்டால் பாவம் மறைந்து போகுமாம். அதாவது  பாவமன்னிப்புச் சீட்டு வாங்குதல் என்ற முறை ஒன்று உண்டு. அதன்படி பாதிரியிடம் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி பாவ மன்னிப்புச் சீட்டு வாங்கினால் பாவம் போய்விட்டதாகப் பொருள். இப்படியே பாதிரி பாமர மக்களிடம்  பொருளை வாங்கிக் கொண்டு. “நான் உங்கள் பாவத்தைப் போக்க மன்னிப்புச் சீட்டுக்கள் கொடுக்கின்றேன்” என்று  மக்களிடம்  பணம் சுரண்டிக் கொண்டு வந்தான். இதனால் நாட்டில் நல்லவன் கூட அயோக்கியத்தனம் செய்துவிட்டு மன்னிப்புச் சீட்டு வாங்கினான். எந்தவிதமான அயோக்கியத்தனம் பொய், புரட்டு, கொலை பாதகம் செய்துவிட்டு சுலபமாக மன்னிப்புச் சீட்டு வாங்குவதன் மூலம் அப்படிச் செய்த பித்தலாட்டங்களின் கொடுமையெல்லாம் மறைந்த போய்விடு கின்றவாம்! இந்தத் துணிவின் பேரில் எவனும் சர்வசாதாரணமாகக் கெட்டுப் போக முடிகிறது.

*****

எப்படியோ ஆத்மா என்பதை பற்றிப் புளுகிவிட்டு; அதைநிலை நாட்டுவதற்கென்று ஒன்றன்பின் ஒன்றாகப் பாவ புண்ணியம், மோட்சம், நரகம், மறு ஜன்மம், பிதிர்லோகவாசம், கடவுள், என்றெல்லாம் புளுகிக் கொண்டேபோகும் அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஒரு புளுகை மறைக்க எண்ணற்ற அபாண்ட, அஸ்திவார மற்றதுமானப் புளுகுகள் அதுவும் கண்ணை மூடிக்கொண்டு எப்படி எப்படி புளுகவேண்டும் என்றுகூட சிந்தித்துப் புளுகாமல் மலைபோன்ற புளுகும்படி ஆகிவிட்டது. அப்படிக் கூறினால்தான் மனிதன் ஓரளவு நம்புவான் என்பதற்கே ஆகும்.

*****

FB_IMG_1726626238184.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 13, 2024

என்னங்கடா, ஊர்ல இல்லேன்னு எகத்தாளமா... Private videos release பண்ணனும்னா அத நாந்தான் பண்ணனும்... வேற எவனும் பண்ணக்கூடாது...

FB_IMG_1726219933164.jpg
Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 06, 2024

சில நாட்களா இங்க எதுவும் எழுதல... நடக்குறதெல்லாம் பாத்து எதுவும் எழுதவும் தோணல... Sudharsan H has articulated what I feel... கீழே உள்ள அவரின் பதிவில் உள்ளது தான் என் மனக் குமைச்சலும் கூட...

*****

Random rant... Skip if you are not interested...

இருக்குற வேலைக்கு நடுவுல இந்த யோசனையெல்லாம் தேவையில்ல தான்... ஆனாலும்...

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடைய மொத்த பட்ஜெட் 63000 கோடி... அதுல இரண்டாவது பகுதிக்கான (phase 2) தொகையா ஒன்றிய அரசு தரவேண்டியது இதுவரைக்கும் 10000 கோடி ரூபாய்கள் கிட்ட... அதை அவங்க தர மறுத்ததால மாநில அரசு 2024-25 க்கான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கியிருக்கிற பட்ஜெட் 12000 கோடி ரூபாய்... மெட்ரோ ரயிலுக்கான முழுச்சுமையும் நம்ம தலைல...

அடுத்தது, Samargra Sikshya abhiyan (அனைவருக்கும் கல்வி) அப்டிங்குற ஒன்றிய அரசுடைய திட்டம்... அதுக்கான திட்டத்தொகை கிட்டத்தட்ட 3000 கோடி... இதுல 60% ஒன்றிய அரசும் 40% மாநில அரசும் ஏத்துக்கனும்னு ஏற்பாடு...

 NEP என்னும் புதிய கல்விக்கொள்கையை நாம செயல்படுத்த மாட்டோம்னு சொன்னதுக்காக ஒன்றிய அரசு மேல சொன்ன 60% தொகையில் ஒரு தவணையாக தரவேண்டிய 573 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு தராம நிறுத்தி வெச்சிருக்காங்க... இதனால கிட்டத்தட்ட 15000 ஆசிரியர்களுக்கான அடுத்த மாத ஊதியம் கிடைக்காம போகும்னு சொல்றாங்க... RTE ன்னு சொல்லப்பட்ற கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கிற மாணவர்களுடைய கல்விக்கட்டணமும் பள்ளிக்கு வழங்கப்படாமல் போகலாம்...

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு (நல்ல விஷயம் தான் ஆனா ராஜ்நாத்சிங் வராம, right man in the wrong party டைப் உருட்டு பாராட்டுகளை கனிமொழி MP அவர்கள் வழங்காம இருந்திருக்கலாம்)

அடுத்ததா, இந்த முருகன் மாநாடும் அதை சார்ந்து வெளியிடப்பட்ட தீர்மானங்களும்... ஆரம்பத்துல பாஜக இந்த ரூட்ல வந்தா நாங்க அப்டியே போய் மடக்குவோம்னு ஆரம்பிச்சு கடைசில அவங்களாவே மாறிப்போயிடுற ஆபத்துல இருக்காங்கன்னு தோணுது...

F4 street race பத்தி பேச்சை எடுத்தாலே தாலியறுப்பு உ.பி அல்லது சங்கி ரப்பர் ஸ்டாம்போட வந்து அடிக்க வாய்ப்பிருக்கு... ரேஸ், அதனைத் தொடர்ந்து கிடைத்த exposure, பாராட்டு எல்லாம் சரி தான்... சந்தோஷம் தான்... But at what cost... And don't even ask me about the status of the roads around my house and my daily commute...

கட்டக்கடைசியா அரசுப்பள்ளிகளுக்கு ஆகாவலி ஆன்மிக (அது ஆன்மிகம் கூட இல்ல halfboilதனமான பேச்சு) பேச்சாளர்களையும் insta influencerகளையும் கூட்டிட்டு வந்து மாணவர்கள் கிட்ட பேச வைக்கிறது, முன்னாடி மிமிக்ரி தாமு பேசி பசங்கள அழ வெச்சது எல்லாம் இன்னும் நினைவிருக்கு... இப்போ இந்த விஷ்ணு பையன்... இதுக்கெல்லாம் யார கேள்வி கேக்குறது... யாரு accountable... அதுவும் எதிர்த்து கேள்வி கேட்ட ஆசிரியரை அவன் corner பண்ணி பேசுறதும்ஃ, சுத்தி இருக்கிறவங்க கண்டுக்காம போறதும், உச்சகட்ட எரிச்சல்...

இவ்வளவு பிரச்சனைகளை வெச்சுகிட்டு  ஒன்றிய அரசோட இணக்கமா போறதும், அவங்க அமைச்சர்களை புகழ்ந்து பேசுறதும், கவர்னர் விழாவுக்கு போறதும், இந்த முருகன் மாநாட்டு தீர்மானம் மாதிரியான விஷயங்கள்ல கவனம் செலுத்துறதையும் பாத்தா மனசு பதறுமா பதறாதா... கோவம் வருமா வராதா...

என்னவோ போங்க 🥹

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

September 06, 2024

Our own Ghost...

#80sKid

Karthik Nilagiri Profile

கார்த்திக் நீலகிரி

August 16, 2024

கொடைக்கானல் அருகே இருக்கும் பள்ளங்கி கிராமத்தில் உள்ள பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டத்துக்கு முட்டு கொடுத்த போது...

தமிழ்நாடு அரசு கல்வெட்டுக்கு முன்னாடி ஒரு board... காவி நிலத்தில் கருப்பு சாலை இருப்பதாக...

//Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY), i.e., Prime Minister Rural Roads Scheme// ஹிந்தில சொன்னா புரியாது'னு அவங்களே Englishல விளக்கமும் தந்துருக்காங்க...

PMGSY

IMG-20240804-WA0017.jpg